மகிழுந்தை மறித்த பொலிஸாருக்கு பதிலடி கொடுத்த சுகாஸ்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் பல தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இன்று 4 ஆம் நாளாக கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.
அத்துடன் குறித்த மாபெரும் பேரணி நாளைய தினம் பொலிகண்டியில் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் இந்த பேரணி இன்று மதியம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழையும் முன்பு, கொழும்பு – மன்னார் பிரதான வீதியின் பறணாயன்குளம் பொலிஸ் சோதனை சாவடியில், சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் வந்த மகிழுந்தை பொலிஸார் இடைமறித்தனர்.
அத்துடன் சுகாஸ் அவர்கள் சென்ற வாகனத்தையும் பதிந்துவிட்டு செல்லுமாறு பொலிஸார் கட்டாயப்படுத்தினர்.
அப்போது சுகாஸ் அவர்கள், வழமையாக போகும்போது இப்படி எழுதுவதா, அப்படி இல்லையென்றால் இப்போது ஏன் பதிய வேண்டும், மன்னார் இலங்கைக்குள் இறக்கின்றதா அல்லது மன்னார் தனி நாடா? நாங்கள் ஜனநாயக பேரணிக்கு செல்கின்றோம், எம்மை தடுக்க முடியாது என கூறி சென்றதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை