ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பம்!

 


நாடு பூராகவும் 5,000 குளங்களை புனரமைக்கும் ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.


இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று சனிக்கிழமை வவுனியா செட்டிக்குளம் பெரியதம்பணை ஆலடிக்குளத்தில் இடம்பெற்றது. இக்குளமானது 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.


வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.


இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன்,பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கே.கே.மஸ்தான், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி. நீகால் சிறிவர்த்தன, கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல் அபேரத்ன, செட்டிகுளம் பிரதேச சபைத்தலைவர் சு.ஜெகதீஸ்வரன், வடக்கு பிரதேச சபை தலைவர் ச.தணிகாசலம், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் இ.பிரதாபன், வவுனியா நகர பிரதேச செயலாளர் கமலதாஸன் மற்றும் கமக்கார அமைப்புக்கள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.