பிரித்தானியா இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜோன்சன் அறிவிப்பு!!
பிரித்தானியாவில் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ள நிலையில் நாடு படிப்படியாக இயல்பான நிலைக்கு திரும்புவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றுவதால், பொதுமக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக அரசாங்கம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக இங்கிலாந்தின் மிகப்பெரிய கல்விச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அனைத்து தர மாணவர்களும் திங்களன்று பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்பலாம் என்றும் வருகை கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சரியான காரணமின்றி வருகையை நிறுத்த முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை