ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது!
தனது உறவினருக்கு பதிலாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்காக பரீட்சை நிலையத்தில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அனுராதபுரம், களுவில பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய திஸ்ஸமஹாராம வீரவில பகுதியில் வசிப்பவர் ஆவார்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை முறைகேடுகள் தொடர்பாக இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை