தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு பிரதமர் கள விஜயம்!

 கொழும்பு நகரசபைப் பகுதியில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அபயராம விகாரைக்கு இன்று (வியாழக்கிழமை) சென்றிருந்த அவர், அங்கு ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மேற்பார்வை செய்தார்.

இந்தத் திட்டமானது கொழும்பு நகரசபையின் உறுப்பினர்களான கலகம தம்மரன்சி தேரர், வைத்தியர் பிரதீப் காரியவாசம் மற்றும் மனோரி விக்ரமசிங்க ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய செயற்படுத்தப்பட்டது.

அத்துடன், இந்த தடுப்பூசி முகாம் கொழும்பு நகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி மற்றும் மருத்துவக் குழுவினரின் பங்குபற்றலில் முன்னெடுக்கப்பட்டது.

இதில், நாரஹென்பிட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி மேற்கு மாகாணத் தலைவர் சங்கநாயக்க முருத்தேட்டுவே ஆனந்த நாயக்க தேரர், மகா சங்கத்தினர், வைத்தியர்கள், வைத்திய தாதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.