குடியரசுத் தின நிகழ்வில் இராணுவத் தளபதிக்கு அழைப்பு!

 பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 81ஆவது குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், இதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் குடியரசு தினத்தில் கலந்துகொள்ளும் முதல் இலங்கை இராணுவத் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.