பொலிசார் சுற்றிவளைப்பு- கிளிநொச்சியில் பலர் அதிரடியாக கைது!!

 


கிளிநொச்சி பொலிஸ் எல்லைக்குள் 24 மணிநேர அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டதில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம் உருத்திரபுரம், திருவையாறு பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமணல் அகழ்வினை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 17 பேர் கைதாகியுள்ளதுடன், 8 ஊழவு இயந்திரங்களும், 9 டிப்பர்களும் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.