நாகதம்பிரானின் பொங்கல் விழா இன்று!


கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி ஆலயத்திலிருந்து விளக்கு வைத்தல் பூசை மற்றும் பிரம்பு வழங்கும் வைபவத்துடன் மீசாலை புத்தூர் சந்திக்கு பண்டம் எடுப்பதற்காக பக்தர்கள் சென்றிருந்தனர்.

அவர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பரந்தன் சந்தியில் இருந்து ஏ-35 வழியாக கண்டாவளை வரைச்சென்று கண்டாவளை ஊடாக புளியம்பொக்கனை நோக்கிச் செல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று இரவு அவர்கள் ஆலயத்தைச் சென்றடைவதுடன் ஆலயத்தின் பொங்கல் விழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடைபெறவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.