கத்தி குத்துக்கு இலக்காகி கும்பத்தார் ஒருவர் உயிரிழப்பு!!


 கிளிநொச்சி மாவட்டத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி கும்பத்தார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த சம்பவமானது நேற்றையதினம் கிளிநொச்சி, வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் பிறந்தநாள் தினமான நேற்று வீட்டில் நின்ற குடும்பஸ்தரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்திடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக காவற்துறையினறிற்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு உட்பட்டவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் .

உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துசியந்தன் (வயது 32) என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.