இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை!!

 


இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டிருந்த 54 இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 3 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி - மன்னார் இடையிலான கடற்பரப்புக்களில் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தவிர்ந்த 40 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் பெருமெடுப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றபோதும் இறுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது நாடகம் எதற்காக? என வடக்கு மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



மேலும் , இந்தியா - இலங்கை இடையிலான டீல் காரணமாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் குறித்து யாரும் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.