ஏறாவூரில் 29 பேருக்கு எச்சரிக்கை!


கொரோனா தொடர்பில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது வீதியில் பயணம் செய்வோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக ஏறாவூர்ப் பொலிஸார் பிரதான வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். ஏறாவூர் பொலிஸாரினால் 250 வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 29 பேர் எச்சரிக்கப்பட்டனர்.

அத்துடன் 28 பேருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி . ஜயந்த தெரிவித்தார். சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலைப் பின்பற்றாது பலர் முகக்கவசங்கள் அணியாது வீதியில் பயணித்தாகவும் , சிலர் முகக்கவசங்களை உரிய முறைப்படி அணியாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் குழுவினர் வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களிலும் திடீர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.