திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு!
களனி புதிய பாலத்துக்கு அருகில் மகிழுந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை