திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு!


களனி புதிய பாலத்துக்கு அருகில் மகிழுந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.