நாட்டில் இரண்டாவது டோஸை பெற்ற 22,919 நபர்கள்!


நாட்டில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 22,919 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

  அதன்படி கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று மாத்திரம் 19,474 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி தேசிய கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15 வரை 925,242 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றனர்.

இந் நிலையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்து பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பாகியுள்ளது. இதேவேளை நாட்டிலுள்ள 2,435 சீன நாட்டினருக்கும் சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.