ஆயிரத்து 426 கொரோனா நோயாளர்கள் மட்டக்களப்பில் இனங்காணல்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 15 பேரும் மட்டக்களப்பு சுகாதார பிரிவினை சேர்ந்த 06 பேரும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவருமாக 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒன்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இரண்டுமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1426 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை