சிஎஸ்கே வீரருக்கு பத்தே நிமிடத்தில் உதவி செய்த சோனுசூட்!!

 


தனது நெருங்கிய உறவினருக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் சிஎஸ்கே வீரர் ஒருவர் தவித்த நிலையில் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க நடிகர் சோனு சூட் பத்தே நிமிடங்களில் செய்த உதவி வைரலாகி வருகிறது.


சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா அவர்கள் தனது 65 வயது அத்தை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும் தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் சோனு சூட் உடனடியாக 10 நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்சிஜன் சென்று சேரும் என குறிப்பிட்டுள்ளார்.


அவர் குறிப்பிட்டபடி சுரேஷ் ரெய்னா அத்தை அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு பத்து நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நடிகர் சோனு சூட் அவர்களுக்கு சுரேஷ் ரெய்னா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடிகர் சோனு சூட் உதவி செய்து வரும் நிலையில் தற்போது சிஎஸ்கே வீரருக்கும் தனது உதவியை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.