சிகிச்சைக்கு தேவையானஉபகரணங்கள் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன!!


 திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினால், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரால் அண்மையில் கோரப்பட்டிருந்த 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான  உபகரணங்களே இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி சேகரிப்பின் ஊடாக வைத்திய இயந்திரங்கள், முகக் கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகள், தொலைக்காட்சி ஆகிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.