மகன், மகள் பெயரில் கொரோனா நிதி கொடுத்த நடிகர் சூரி!

 


தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவிகளை செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தமிழக அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்


இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சூரி தனது பங்காக ரூபாய் 10 லட்சம் மற்றும் தனது மகன் மகள் சார்பாக ரூபாய் 25,000 கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சூரி அவர்கள் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பாக ரூபாய் 25,000 ரொக்கத்தையும் அளித்துள்ளார்


இந்த தொகை மற்றும் காசோலையை நடிகர் சூரி, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி அவர்களை நேரில் சந்தித்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.