கொரோனா பாதிப்பு- கண்டியில் 12பேர் பலி!!

 


கண்டியில் ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28970ஆக அதிகரித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நேற்று மாத்திரம் 118 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரும். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 97 பேரும் அடங்குகின்றனர். கண்டி மாவட்டத்திலேயே இதுவரை அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் உள்ளனர்.

அதற்கமைய அந்த மாவட்டத்தில் 15525 பேர் இதுவரை இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

மேலும்  நேற்றுடன் முடிந்த 24 மணிநேரத்திற்குள் மத்திய மாகாணத்தில் 12 கொரோனா உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.