மருதானை பொலிஸ் நிலையத்தில் தீவிபத்து!!
கொழும்பு, மருதானை காவல் துறை நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து மருதானை பொலிஸ் நிலையத்தின் மேல் மாடியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை