தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்!

 


தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து காரில் திருக்குவளை நோக்கி சென்றபோது, திருவாரூர் அருகே அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரை சேர்ந்த சோப்ரா மற்றும் ரமா ஆகியோர் முதல் அமைச்சரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு மணக்கோலத்தில் நின்ற ஜோடியை கண்டதும் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது மணமக்கள், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என அவரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார்.

அதன்பின்னர் அவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதேவேளை அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினும் முதலமைச்சருடன் இருந்தார்.

இந்நிலையில் திருமண மண்டப வாசலில் முதல்-அமைச்சர் தலைமையில் தங்களது திருமணம் நடந்ததால் புதுமண ஜோடி இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படம் சமூக வைலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.