விரைவில் தொலைபேசிகளின் விலை குறித்த தகவல்!!


அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கையடக்கத் தொலைபேசி (ஸ்மார்ட் போன்) குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, மின் உபகரணங்கள் உட்பட வாசனைத் திரவியங்களையும், அழகுசாதரனப் பொருட்களையும் இறக்குமதி செய்வதை அரசாங்கம் இடைநிறுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறை, டொலர் நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் இந்த முடிவுக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரண்மாக குறித்த பொருட்களின் விலைகளும், தட்டுப்பாடும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.