9வது பிரதமர் மலேஷியாவில் நியமிக்கப்பட்டார்!
மலேஷியாவின் பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் மன்னரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை இழந்தமையினால் மொஹிதின் யாசின் பதவியிலிருந்து விலகிய நிலையில் மன்னரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்மாயில் சப்ரி யாகூப் யாசினின் அமைச்சரவையி;ல் சிரேஷ்ட அமைச்சராகவும் துணை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மலேஷியாவின் 9வது பிரதமராக நாளைய தினம் 61 வயதுடைய யாகூப் பதவியேற்க உள்ளார்.
புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் நாட்டில் அண்மைகாலமாக நிலவிய நெருக்கடி நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை