வவுனியா மக்களே விழித்துக்கொள்வீர்!📸


வவுனியா பூந்தோட்டம் மின் மயானம் நகரசபையால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. நேற்று. (கொரோனா மரணங்களை எரிகின்ற மயானம்)  ஆக சுடலை தயாராகிட்டு..!!! 


வவுனியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் இறப்பும் கூடிக்கொண்டு போகிறது.


வவுனியா வைத்தியசாலை நிலைமை கை மீறி போய்விட்டதாக வைத்தியர்கள் தாதிகள் வேதனையில் திணறி வருகின்றார்கள்.


ஆனால் மக்கள் பொறுப்பற்று ஊர் முடக்கத்தில் இருந்தும் அதிகமாக நடமாடி திரிகின்றார்கள். உங்கள் வீட்டில் தொற்று ஏற்படும் வரை எல்லாம், எல்லாம்.. அலட்சியம்..

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு.. உங்களுக்கு சுய அவதானம் இல்லாவின் யாராலும் காப்பாற்ற முடியாது. நீங்களே உங்களின், உங்கள் குடும்பத்தின் பாதுகாவலர்கள். 


வவுனியா மக்களே விழித்துக்கொள்வீர்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.