கொரோனா சடலத்துடன் சென்ற வாகனம் விபத்து!!

 


கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தகனத்துக்காக முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை நோக்கிக் கொண்டு சென்ற சிறிய ரக லொறி ஒன்று வித்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் நேற்று மாலை முல்லைத்தீவு கொக்கிளாய் பயணப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமுற்ற லொறியின் சாரதி முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் சடலத்தை பிறிதொரு சாரதி மூலம் தகனத்துக்காக அனுப்பி வைத்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மின் தகனம் செய்யும் வசதி இல்லை என்றும் கொவிட் நோயால் இறந்தவர்களின் உடல்களை வவுனியா, யாழ்ப்பாணம் அல்லது திருகோணமலைக்கு எடுத்துச் செல்லும் நிலை காணப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.