நாக சைத்தன்யா, சமந்தா விவகாரம்- வாழ்த்தும் நன்றியும்!!

 


தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் சமந்தா - நாகசைதன்யா விவாகரத்தா என்பதுதான் கடந்த சில வாரங்களாக முதன்மை கிசுகிசுவாக இருந்து வருகிறது. தனது மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து கூறியிருந்தாலும் அதற்கு நாகார்ஜுனா பதிலளிக்கவில்லை. அதனால், அவர்கள விவகாரத்து கிசுகிசு உண்மை தான் போல என்றும் ரசிகர்களும், மீடியாக்களும் நினைத்தார்கள்.


இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நாகசைதன்யா டுவிட்டரில் பகிர்ந்த அந்தப் பதிவை ரிடுவீட் செய்து, படத்தின் நாயகி சாய் பல்லவியை மட்டும் 'டேக்' செய்து, 'வின்னர், குழுவினருக்கு நன்றி' என சமந்தா வாழ்த்தியிருந்தார். அதில் கூட அவர் நாகசைதன்யாவை ஏன் 'டேக்' செய்யவில்லை, அவருக்கென தனியாக ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற சந்தேகமும் கிளம்பியது.

சமந்தா நேற்று மாலை பதிவிட்ட அந்த வாழ்த்திற்கு நாக சைதன்யாவும் உடனடியாக பதில் தெரிவிக்கவில்லை. எனவே, வழக்கம் போல விவாகரத்து கிசுகிசு இறக்கை முளைத்து பறந்தது. இந்நிலையில் இன்று காலை சமந்தாவிற்கு நன்றி தெரிவித்து 'நன்றி சாம்' என பதிலளித்துள்ளார் நாக சைதன்யா. ஆனால், அந்த பதிலுக்கும் பல ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி கேள்வி கேட்டு வருகின்றனர்.

சமந்தா - நாக சைதன்யா இருவரும் வெளிப்படையாக இது பற்றி அறிவிக்கும் வரை 'விவாகரத்து கிசுகிசு' வந்து கொண்டுதான் இருக்கும்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.