இந்தியா மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்!!
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்தியா மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியா மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் பயணித்த பாடகு விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் கடலில் வீழ்ந்த மீனவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டபோதிலும் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் சில நாட்களில் குறித்த மீனவர்கள் இருவரும் இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை