உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது!

 


கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி-கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் உட்பகுதியிலிருந்தே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட துப்பாக்கி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.