வெளிநாட்டு பிரஜை ஆபத்தான பொருளுடன் கைது!!
118 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய கொக்ஹெய்னுடன் டியுனிசியா நாட்டு பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 4 கிலோவுக்கு அதிகமாக கொக்ஹெய்ன் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , சந்தேகநபரும் அவரால் கொண்டு வரப்பட்ட போதைப் பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை