சிவனொளிபாதமலைக்கு சென்ற 16 இளைஞர்கள் கைது!


சிவனொளிபாதமலை தரிசனம் செய்வதற்காக சென்ற 16 இளைஞர்கள் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (08-01-2022) ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கைது சம்பவத்தில் ஹட்டன் பொலிஸாரினால் 10 பேரும், மஸ்கெலியா பொலிஸாரினால் 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (09-01-2022) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலன்னறுவை, குருணாகலை, மாவனெல்லை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிவனொளிபாதமலை புனித பிரதேசத்திற்கு சங்கீத உபகரணங்கள் மது பானங்கள், பிலாஸ்ரிக் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் கொண்டு செல்லும் போது மவுசாலை பொலிஸ் சோதனை சாவடியில் அவற்றினை பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி வரும் போது ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.