யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு வீதிகளில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


யாசகர்களில் பலர் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறிப்பாக குடும்பங்கள் யாசகம் பெறும் நிலை கொழும்பு மாநகரில் உள்ளது.


கொழும்பு நகரில் மாத்திரம் தற்போது சுமார் 300 யாசகர்கள் யாசகம் பெறுவதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.


இதேவேளை மேல் மாகாணத்தில் மட்டும் 671 யாசகர்கள் தற்போது யாசகம் பெற்று வருகின் றனர்.


ஒரு மாதத்தில் கொழும்பில் மாத்திரம் சுமார் 10 யாசகர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.


இந்த இறப்புகளில் தொண்ணூற்றொன்பது சதவீதமானோருக்கு  உறவினர்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.