கிளிநொச்சியில் டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் விபத்து!


 டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு அதிகளவான உழவு இயந்திரங்கள் வருகை தந்திருந்தன.

இந்த நிலையில், குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அருகில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் விழுந்துள்ளது. குறித்த உழவு இயந்திரத்தை மீட்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

- நிருபர் சப்தன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.