சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜன் காலமானார்!


 அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, பனங்காட்டைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இரத்தினம் நடராஜன், நேற்று (20) காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 64 ஆகும்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், 1980 முதல் வீரகேசரி பத்திரிகையில் பொத்துவில் நிருபராக கடமையாற்றினார்.

தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் பனங்காடு நிருபராக கடமையாற்றியதுடன், சுதந்திர ஊடகவியலாளராக தமிழ்மிரர், உதயன், வலம்புரி, தமிழ்தந்தி, மெட்ரோ, தினப்புயல் மற்றும் பிபிசி தமிழ் போன்ற ஊடகங்களில் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தை அமைப்பதில் இவர் பக்கபலமாக இருந்துள்ளார்.

நடராஜனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் சோகத்தில் ஊடவியலாளர்களாகிய நாமும் பங்கேற்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

-நிருபர் வி.ரி.சகாதேவராஜா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.