கோபுரத்தில் இருந்து “கோட்டா கோ ஹோம்’’ கோஷம்
திருகோணமலை - சேருநுவர நகர் பகுதியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறிய தனிநபர் ஒருவர், "Gota go home " என்ற வாசகத்தை ஏந்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேருநுவர பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் சுலோகங்களை ஏந்தி , கோஷங்களை எழுப்பி, அரசாங்கத்தின் மீதுள்ள எதிர்ப்பை நேற்றுமுன்தினம் (09) வெளிப்படுத்தியிருந்தனர். இதன்போது டயர்களை எரித்தும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறியிருந்த நபர் கோட்டாபாய, பசில் ராஜபக்ஷர்களுக்கு எதிராக தமது கோசத்தை எழுப்பினார். மாலை 4.20 தான் ஆரம்பித்த எதிர்ப்பு போராட்டத்தில், மாலை 6.30 நிறைவு செய்துகொண்டு கோபுரத்தில் இருந்து இறங்கிக்கொண்டார்.
கருத்துகள் இல்லை