நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி!

 


அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது.


இதன்படி, முதலில் பந்துவீச இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போட்டி கண்டி பல்லேகெல விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முதல் இரண்டு போட்டியிகளிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.