யாழ்.பல்கலை ஒழுக்காற்று அதிகாரி மாணவிகள் மீது குற்றச்சாட்டு!

யாழ்.பல்கலைகழகத்திற்குள் புகுமுக இஸ்லாமிய மாணவிகள் மீது பகிடிவதை புரிந்ததாக கூறியதுடன் தமது மத நம்பிக்கைகள் குறித்தும் பல்கலைகழக ஒழுங்காற்று பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பேசியதாக மாணவிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து மாணவிகள் தரப்பில் ப்ல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டதாவது,

தமது சொந்த ஊரை சேர்ந்த புகுமுக மாணவிகள் இருவரை பல்கலைகழக வளாகத்திற்குள் சந்தித்து தமது மத நம்பிக்கைகள் குறித்து பேசிய நிலையில் , இதனை அவதானித்த விரிவுரையாளர் ஒருவர் பல்கலைகழக ஒழுக்காற்று பிரிவு பொறுப்பதிகாரியிடம் முறையிட்டதாகவும் கூறியுள்ளனர்.

யாழ்.பல்கலைகழக ஒழுக்காற்று அதிகாரி மாணவிகள் குற்றச்சாட்டு! | Jaffna University Disciplinary Officer

இதனையடுத்து ஒழுக்காற்று பிரிவு பொறுப்பதிகாரி தனது அறைக்கு தங்களை அழைத்து பகிடிவதை செய்ததாக அச்சுறுத்தியதுடன், தங்கள் மத நம்பிக்கைகள் குறித்து இழிவாக பேசியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதோடு , பகிடிவதை செய்யவில்லை என பல தடவைகள் தாம் கூறியதையும் பொருட்படுத்தாமல், எழுத்துமூலம் கேட்டதுடன், அதனை பல்கலைகழகத்திற்கு வெளியே சென்று போட்டோ பிரதி எடுத்து தருமாறும் தங்களை வருத்தியதாகவும் மாணவிகள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.