காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் மீண்டும் சேவையில்

 


ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை /கொழும்பு இரவு தபால் புகையிரதம் நாளை 19.08.2022 முதல் சேவையில் தினமும் சேவையில் ஈடுபடும்.

நாளை இரவு கொழும்பில் இரவு 8மணிக்கு புறப்படும் புகையிரதம் வவுனியாவை அதிகாலை 01.39க்கு வந்தடைந்து யாழ்ப்பாணம் 04.39 , காங்கேசன்துறையை 05.19க்கு சென்றடையும்.

அதேபோல் 20.08.2022 காங்கேசன்துறையில் இருந்து 18.00க்கும், யாழ்ப்பாணதில் இருந்து 18.45க்கும் புறப்படும் இப்புகையிரதம் வவுனியாவை இரவு 21.51 க்கு வந்தடைந்து அதிகாலை 04.00க்கு கொழும்பை சென்றடையும்.

இப்புகையிரத்தில் 1ம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2ம் வகுப்பு ஒதுக்கப்பட்ட பெட்டி, 2ம் வகுப்பு சாதாரண பெட்டி, 3ம் வகுப்பு ஒதுக்கப்பட்ட பெட்டி, 3ம் வகுப்பு சாதாரண பெட்டிகள் காணப்படுவதோடு இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட M11 என்ஜின், ICF பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடும்.

கட்டண விபரங்கள்.

1ம் வகுப்பு (குளிரூட்டப்பட்டது) – 3200/-
2ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) – 2200/-
3ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) – 1800/-
(காங்கேசன்துறை/வவுனியா/கொழும்பு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.