புக்கர் பரிசு பெற்ற இலங்கை எழுத்தாளர்!!

 



இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக  புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆறு எழுத்தாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார். 


இத்தகவல் செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.  இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியாளராக வெளிப்பட்ட இலங்கையின் இரண்டாவது எழுத்தாளர் இவர் ஆவார்.


கடந்த ஆண்டு, அனுக் அருட்பிரகாசம், 34, A Passage North எனும் இலங்கை போருக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய நாவலுக்காக இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தார்.


 47 வயதான  ஷெஹான் கருணாதிலகவின் இரண்டாவது நாவலான ‘தி செவன் மூன்ஸ் ஒப் மாலி அல்மேடா’ இம்முறை புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது பட்டியலில் உள்ள மற்ற ஐந்து எழுத்தாளர்களில் மூன்று பெண்களும் இரு ஆண்களும் அடங்குகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.