யாழ்.தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீர் இடமாற்றம்!!

 


இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் யாழ் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு நேற்று மாலை திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தால் குறித்த இடமாற்ற கடிதங்கள் நேற்று மாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தவிர்ந்த ஏனைய மூவரும் யாழ் மாவட்டத்திற்கு வெளியில் அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மைய நாள்களில் ஆறு தடவைகள் குடு போதைப் பொருள் வியாபாரிகளை தொடர்ச்சியாக கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினமும் தினமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடு போதைப் பொருளை கடத்தி வந்து விநியோகம் செய்யும் இருவரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாக்குமூலங்களை பதிவு செய்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர் இவ்வாறு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.