பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை!!

 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைத்து வழக்குகளில் இருந்தும் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் ந.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது திவாகரன், பபில்ராஜ் இருவரும் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்வதாக மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.