வேலை வாய்ப்பு பணியகங்களுக்குத் தடை!!

 


13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும், ஒப்பந்த சேவைக் காலத்தில் பணியகத்தின் பதிவு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களைக் கவனிப்பதற்கும், பணியிடத்தில் ஏதேனும் பிரச்சினையான சூழ்நிலை ஏற்பட்டால், அதைப் பற்றி அறியவும் சேவை ஒப்பந்த விதிமுறைகளை மீறாத வகையில் தேவையான நிவாரணம் வழங்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும், அந்த நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப தலையிட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பொறுப்புகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக பணியகத்திற்கு வேலை தேடுபவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், தீர்வுகளை வழங்க முன்வராத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் பணியகத்துடனான ஒப்பந்தங்களை மீறியுள்ளதால், அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை பணியகம் மேற்கொண்டுள்ளது.

மேலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு சேவை பணியகம் மேலும் குறிப்பிடுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.