இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து!!

 


மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றுகாலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு  ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.