திருடச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 


யாழில் வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மந்துவில் பகுதியில் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் வெளியேசென்ற நிலையில் பெண் ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.


இந்நிலையில் திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்டு, அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அதேவேளை யாழில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலைல் பட்டப்பகலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.