போதை தலைக்கேறிய நிலையில் காதலனின் வெறிச்செயல்!!
கிளிநொச்சி - உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, உதயநகர் பகுதியில் வாசிக்கும் குறித்த பெண் ஆண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் குறித்த காதலன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரைத் திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த காதலன் போதை தலைக்கேறிய நிலையில், குறித்த யுவதியின் வீட்டுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல், தாய் மற்றும் தம்பியைத் தாக்கிவிட்டு யுவதியை மூச்சக்கர வண்டியில் இழுத்துச் சென்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை