யாழ். வல்லையில் கம்பத்துடன் சோலார் விளக்குகள் கொள்ளை!!

 


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலர் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்துடன் சோ்த்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

அண்மைக்காலமாக வல்லைப்பகுதியில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்களும், திருட்டுக்களும் அதிகமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது!





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.