வவுனியாவில் கட்டுத்துப்பாக்கிகளுடன் இருவர் கைது

 


வவுனியாவில் நேற்று மாலை இருவேறு பகுதிகளில் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது இருவர் கட்டுத்துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மருதோடை, புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியை கைப்பற்றிய பொலிசார் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.


இதே வேளை செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதி வீடு ஒன்றில் கட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் கட்டுத் துப்பாக்கி ஒன்றினையும் 30 வயதுடைய சந்தேக நபர்  ஒருவரையும் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


வவுனியா சதீஸ்  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.