ஒருவர் சுட்டுக் கொலை!!
எம்பிலிபிட்டிய பனாமுர ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்.
வீதியில் மறைந்திருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஓமல்பே பகுதியில் வசித்துவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை