சிறுமியொருவர் மீது கூட்டு வன்புணர்வு - காவல்துறை அலட்சியம்!!

 


யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிசார் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கவில்லை எனவும் இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. 

மேலும்,  நேற்றைய தினம் சிறுமிக்கு ஒருவர் வலுக்கட்டாயமாக மதுபானத்தைப் பருக்கி வன்புணர்வு செய்தார் எனவும் பின்னர் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டார் எனவும் இவ்விடயம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்த வேளையில்,  சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய  காவல்துறை சிறுமியின் தாயாரையே வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லுமாறு கூறியிருப்பதாகவும் தெரியவருகிறது. 

இந்த விடயத்தினை அறிந்த யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுமி தொடர்பில் கவனம் செலுத்தியதாகத் தெரியவருகின்றது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.