Lu Peng Yuan Yu 028 என்ற சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்திய பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 என்ற சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதனையடுத்து, காணாமல் போன 39 பணியாளர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுப்பட்டனர். இதில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கத்தின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நேற்று கண்டெடுக்கப்பட்ட 2 உடல்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை .


சீனாவைச் சேர்ந்த 17 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 17 பேர் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினரை ஏற்றிச் சென்ற சீனக் கப்பல் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.