சுவர் இடிந்து விழுந்து 6 வயது மாணவன் பலி!!

 


வெல்லம்பிட்டிய பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் பாடசாலை அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலையின் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்ததில் 06 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு பலத்த காயங்கள் ஏற்படவில்லை எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.