புரிதல்!!


 நிழலின் தேவையை வெயிலில் உணர்கிறோம், வெயில் வேண்டும் என மழைக்காலத்தில் நினைக்கிறோம்.


ஆதவன் அற்ற நிலை, அநாதையாக இருப்பது போன்றதுதான்.  குளிரும் கூதலுமாய் எத்தனை இடைஞ்சல்கள்...

வானம் கிழித்து,  வெய்யோன் வரமாட்டானா என ஏங்கிக் தவிக்கும் மனதினை, நாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

நாளாந்த நிலை கண்டு,  நிம்மதி தொலைத்து, நினைவுகள் சூடாகி, நெஞ்சு கனத்து, பெருமூச்சு விட்டு
விடியலுக்காக விழி தவிக்கும் நிலை இன்று.

அன்றும் முணுமுணுத்தோம், முறுமுறுத்தோம்...

இன்றும் அதையே செய்கிறோம்.

கலங்க வைக்கும் வாழ்வியல், 
உண்மை இல்லாத உறவுகள், 
கனம் நிறைந்த வீதிப் பயணங்கள்,
மனதை நிறைக்காத சிரிப்புகள், 
அச்சம் தரும் அயலவர்கள்..

இப்படி எத்தனையோ மாற்றங்கள்...

அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு வித்தியாசமான மனநிலை.. 

தோல்வி என்பது சாதாரணமானதல்ல, வெற்றி பெற்றுத் தருகிறது என்றால் தோல்வி கற்றுத் தருகிறது.

மீண்டும் ஒருமுறை தவறியும் தவறமாட்டோம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.